02/06/2026
நெடுஞ்சாலைகளின் இருபுறமும் வளர்க்கப்பட்டுள்ள கோனோ கார்பஸ் (Cono carpus) மரங்களை அகற்றி, பயனுள்ள நாட்டு மரங்களை நடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் திருமதி.சித்ரா அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது..
திருப்பூர் - தாராபுரம், மெட்டூர் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் கோனோ கார்பஸ் (Conocarpus) மரங்கள் அதிக அளவில் நடப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இந்த மரங்கள் மனிதர்களின் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இந்த மரங்களின் மகரந்தத் தூள் காரணமாக ஆஸ்துமா, சுவாசக்குறைபாடு, ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும் இந்த மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கின்றன. அதனால் கோனோ கார்பஸ் (Cono carpus) மரங்களை அகற்றி, பயனுள்ள நாட்டு மரங்களை நடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து அன்னையர் முன்னணியினர் மனு அளித்தனர்..
#இந்துஅன்னையர்முன்னணி