இந்து அன்னையர் முன்னணி

  • Home
  • India
  • Chennai
  • இந்து அன்னையர் முன்னணி

இந்து அன்னையர் முன்னணி An organization for the Hindu women.2 make them patriotic, aware of our cultural heritage.To practice Hindu way of living,so they make d next generation

நாட்டின் பொருளாதாரமும், வீட்டின் பொருளாதாரமும், பெண்ணின் பிடியிலே!பால் பாக்கெட்டாக இருந்தாலும், பகட்டான பொருளாக இருந்தால...
19/10/2025

நாட்டின் பொருளாதாரமும்,
வீட்டின் பொருளாதாரமும்,
பெண்ணின் பிடியிலே!

பால் பாக்கெட்டாக இருந்தாலும்,
பகட்டான பொருளாக இருந்தாலும்,
பாரத்தின் தயாரிப்பை
பயன்படுத்த பழகுவோம்.
மங்கையின் சக்தி கொண்டு
மகத்தான பாரதம் படைப்போம்..

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

இந்து அன்னையர் முன்னணி - தமிழ்நாடு.

#தீபாவளி #இந்துஅன்னையர்முன்னணி

அகில உலகமும் அரண்டது ஆப்ரேஷன் சிந்தூரை கண்டு நம் ஆயுதத்தின் வலிமையும் பாரத அன்னையர்களின் தீரமும் அணு ஆயுதம் இருக்கிறது அ...
30/09/2025

அகில உலகமும் அரண்டது
ஆப்ரேஷன் சிந்தூரை கண்டு
நம் ஆயுதத்தின் வலிமையும்
பாரத அன்னையர்களின் தீரமும்
அணு ஆயுதம் இருக்கிறது
அழித்து விடுவோம் என்றவர்களுக்கு
பதில் சொல்லியது!

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!

இந்து அன்னையர் முன்னணி - தமிழ்நாடு.

#நவராத்திரி #சரஸ்வதிபூஜை #ஆயுதபூஜை #இந்துஅன்னையர்முன்னணி

 #நவராத்திரி  #ஒன்பதாம்நாள்நவராத்திரி இறுதி நாளில் சரஸ்வதி தேவி, அன்னை சாமுண்டேஸ்வரி ரூபமாக காட்சியளிப்பாள்...இன்றையநாள்...
30/09/2025

#நவராத்திரி #ஒன்பதாம்நாள்

நவராத்திரி இறுதி நாளில் சரஸ்வதி தேவி, அன்னை சாமுண்டேஸ்வரி ரூபமாக காட்சியளிப்பாள்...

இன்றையநாள் புத்தகத்தை வைத்து வழிபட்டுவிட்டு, குறைந்தது ஒரு பக்கத்தையாவது வாசித்தால், சரஸ்வதி தேவி நம் நாவில் நாட்டியம் ஆடுவாள்...

இந்த ஒன்பது நாளும் அன்னையை முழுமனதோடு ஆராதித்துவிட்டு, அதோடு நிறுத்திக் கொண்டால் அன்னையின் முழு அருளையும் அடைய முடியாது. தினசரி ஐந்து நிமிடமாவது அன்னையின் திருநாமத்தை துதிக்க வேண்டும்...

#நவராத்திரி #சரஸ்வதி #சாமுண்டேஸ்வரி #சரஸ்வதிபூஜை #ஆயுதபூஜை #இந்துஅன்னையர்முன்னணி

 #நவராத்திரி  #எட்டாம்நாள் நவராத்திரி எட்டாம் நாளில் சரஸ்வதி தேவி, அன்னை துர்க்கா அல்லது நரசிம்மதாரணி ரூபமாக காட்சி அளிப...
29/09/2025

#நவராத்திரி #எட்டாம்நாள்

நவராத்திரி எட்டாம் நாளில் சரஸ்வதி தேவி, அன்னை துர்க்கா அல்லது நரசிம்மதாரணி ரூபமாக காட்சி அளிப்பாள்...

சரஸ்வதி தேவியின் புகழை பாடும் நலசரித்திரம் என்ற நூலின் பாடலை இன்று இசைப்பதினால், தாயவள் நம் அறியாமை இருளைப்போக்கி ஞான ஒளியை ஒளிரச் செய்வாள்..

உக்கிர கோலத்தில் அன்னை அருள் பாவிப்பதினால் தீயசக்திகளும், எதிர்மறை எண்ணங்களும் எளிதில் நம்மை விட்டு அகன்றுவிடும்..

#நவராத்திரி #சரஸ்வதி #துர்கா #இந்துஅன்னையர்முன்னணி

 #நவராத்திரி  #ஐந்தாம்நாள்நவராத்திரி ஐந்தாம் நாளில் மகாலட்சுமிதேவி, வைஷ்ணவி ரூபமாக காட்சியளிப்பாள்..சுமங்கலிக்கு அன்னதான...
26/09/2025

#நவராத்திரி #ஐந்தாம்நாள்

நவராத்திரி ஐந்தாம் நாளில் மகாலட்சுமிதேவி, வைஷ்ணவி ரூபமாக காட்சியளிப்பாள்..

சுமங்கலிக்கு அன்னதானம் செய்து, உற்றார் அல்லாத சிறுமியர் 9 பேருக்கு பட்டுப்பாவாடை எடுத்து கொடுப்பதும், அன்னையை ஆயிரம் முறை ஆராதிப்பதற்கு சமம்..

இன்றைய வழிபாடு புத்திர பாக்கியத்தை பூர்ணமடையச் செய்யும்..

#நவராத்திரி #வைஷ்ணவி #இந்துஅன்னையர்முன்னணி

 #நவராத்திரி  #நான்காம்நாள்நவராத்திரி நான்காம் நாளிலிருந்து அடுத்த மூன்று நாள் அலைமகளான மஹாலக்ஷ்மி தேவிக்கு ஆராதனை செய்ய...
25/09/2025

#நவராத்திரி #நான்காம்நாள்

நவராத்திரி நான்காம் நாளிலிருந்து அடுத்த மூன்று நாள் அலைமகளான மஹாலக்ஷ்மி தேவிக்கு ஆராதனை செய்ய வேண்டும்..

மஹாலக்ஷ்மி ஸ்லோகத்தோடு விஷ்ணு பகவான் போற்றிகளையும் சேர்த்து துதித்தால் துயரில்லா வாழ்வளிப்பாள் வரலட்சுமி..

இன்றைய வழிபாடு நம் குடும்பத்தின் பொருள் கடனைத் தீர்ப்பதோடு சேர்த்து, பிறவி கடனையும் தீர்க்கும். செல்வத்தின் இளவரசி மகாலட்சுமி என்பதால், பொருள் செல்வத்தோடு சேர்த்து ஆத்ம செல்வத்தையும் அளவில்லாது அள்ளி கொடுப்பாள்..

#நவராத்திரி #மஹாலட்சுமி #இந்துஅன்னையர்முன்னணி

 #நவராத்திரி  #மூன்றாம்நாள்நவராத்திரி மூன்றாம் நாளில் அன்னை, பார்வதியின் அவதாரமான வாராஹி ரூபமாக காட்சியளிப்பாள்.ஒன்பது ந...
24/09/2025

#நவராத்திரி #மூன்றாம்நாள்

நவராத்திரி மூன்றாம் நாளில் அன்னை, பார்வதியின் அவதாரமான வாராஹி ரூபமாக காட்சியளிப்பாள்.

ஒன்பது நாளும் அம்பிகை நட்சத்திரம் அல்லாமல் திதியை நோக்கி வந்தாலும், மூன்றாம் நாள் திதி சிறப்பு விசேஷம். முதல் இரண்டு நாள் வழிபடத் தவறியவர்கள், மூன்றாம் நாள் வழிபாட்டை தொடங்கலாம்..

இன்று அன்னை இச்சா சக்தியாக உருவெடுத்து, மனக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி, மன அமைதிக்கு வழி வகுப்பாள்..

பார்வதியின் அவதாரம் நிறைவுற்று, நாளை மகாலட்சுமி அவதரிக்க இருப்பதால், வீட்டின் பொருளாதாரம் வீரியம் பெறும்..

#நவராத்திரி #வாராஹி #இந்துஅன்னையர்முன்னணி

 #நவராத்திரி  #இரண்டாம் நாளில், பார்வதியின் அவதாரமான துர்க்கையை கௌமாரியின் ரூபமாக வழிபட வேண்டும்..இன்று சிவ துர்க்கை,விஷ...
23/09/2025

#நவராத்திரி #இரண்டாம் நாளில், பார்வதியின் அவதாரமான துர்க்கையை கௌமாரியின் ரூபமாக வழிபட வேண்டும்..

இன்று சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை என்ற ஒரு தேவியின் இரு அம்சத்தையும் வழிபட வேண்டும்..

துர்க்கம் என்றால் அகழி என்பது பொருள். ஒரு கோட்டைக்கு அகழியானது எவ்வாறு அரணாக இருந்து காக்கின்றதோ, அதேபோல் அபாயம் அல்லாத வாழ்வு வாழ #கௌமாரி அரணாக இருப்பாள்...

துன்பத்தையும் துடைத்து இன்பத்தை இருதயத்தில் மலரச் செய்வாள்...

#நவராத்திரி #கௌமாரி #இந்துஅன்னையர்முன்னணி

நவராத்திரியின் முதல் நாள்.. இன்று முதல் நவராத்திரி தொடங்குகிறது..முதல் நாளான இன்று வழிபடக்கூடிய தெய்வம், வழிபாட்டு முறைக...
21/09/2025

நவராத்திரியின் முதல் நாள்..

இன்று முதல் நவராத்திரி தொடங்குகிறது..

முதல் நாளான இன்று வழிபடக்கூடிய தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்களையும் தெரிந்து கொள்வோம்..

#நவராத்திரி #இந்துஅன்னையர்முன்னணி

வழிபட வேண்டிய ஆலயம் வழிபாடற்ற அவலமாய்! வணங்க வேண்டிய இறை நாத்திகன்பிடியில் சிறையாய்! கொடையாய் அளித்த தங்கம் கொடியவனின் க...
26/08/2025

வழிபட வேண்டிய ஆலயம்
வழிபாடற்ற அவலமாய்!
வணங்க வேண்டிய இறை
நாத்திகன்பிடியில் சிறையாய்!
கொடையாய் அளித்த தங்கம்
கொடியவனின் கையில் தஞ்சமாய்!
ஆடி பாடிய கோவில் கொண்டாட்டம்
அறநிலைத்துறையிடம் சிக்கி திண்டாட்டமாய்!

பக்தனுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை மாறி
பகவானுக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது..

நம்ம சாமி! நம்ம கோவில்!! நாமே பாதுகாப்போம்!!!

அனைவருக்கும் இனிய ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

இந்து அன்னையர் முன்னணி - தமிழ்நாடு.

#நம்மசாமி_நம்மகோவில்_நாமேபாதுகாப்போம் #விநாயகர்சதுர்த்தி #இந்துஅன்னையர்முன்னணி

திலகத்தில் ஏற்பட்ட கலங்கம், உலகையே உலுக்கி பார்த்தது.அடிமை, அடுப்படி என்றோருக்கு, ஆப்ரேஷன் சிந்தூர் பதில் சொல்லியது!பெண்...
14/08/2025

திலகத்தில் ஏற்பட்ட கலங்கம்,
உலகையே உலுக்கி பார்த்தது.

அடிமை, அடுப்படி என்றோருக்கு,
ஆப்ரேஷன் சிந்தூர் பதில் சொல்லியது!

பெண்ணிடம் இந்திய பொருளாதாரம்,
உயர்கிறது வளர்ச்சியின் விகிதாச்சாரம்.

ஆணுக்கு நிகர் என்ற
அடிமை சிந்தனை போக்கி.
அதற்கு மேல் புனிதமாய்
அன்னையரை போற்றுவோம்.

அனைவருக்கும் இந்து அன்னையர் முன்னணியின்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!

கோவை மாவட்டம், வால்பாறை - இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி முதல் வாரம் அம்மனுக்கு, 300 தீர்த்த  குடங்கள் ஊர்வலமாக எட...
21/07/2025

கோவை மாவட்டம், வால்பாறை - இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி முதல் வாரம் அம்மனுக்கு, 300 தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது..

#கோவை #வால்பாறை #மஞ்சள்நீர்அபிஷேகம் #இந்துமுன்னணி #இந்துஅன்னையர்முன்னணி

Address

59, அய்யா முதலி தெரு
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when இந்து அன்னையர் முன்னணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to இந்து அன்னையர் முன்னணி:

Share

Category